Tuesday, February 4, 2014

அன்புடையீர்.. 
வணக்கம்.. 
நலனே விளைய வேண்டுகிறேன்..

இலக்கியவீதி (07.02.2014) அழைப்பை இணைத்திருக்கிறேன்..

உறவும் நட்புமாக வருகைத் தர வேண்டுகிறேன்..

என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..

Thursday, January 23, 2014

வணக்கம்..
நலனே விளைய வேண்டுகிறேன்..
மீண்டும் உங்களை இலக்கியவீதி அழைப்பிதழோடு சந்திப்பதில்,
பெரு மகிழ்வு எய்துகிறேன்...
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்..
என்கிற புதிய தொடர் நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறோம்.. 

இந்த வரிசையின் முதல் நிகழ்வு  ' மறுவாசிப்பில் புதுமைபித்தன்..'
நாளை (24.01.14) மாலை 6.00 மணிக்கு தியாகராய நகர் 
கிருஷ்ணகான சபாவில்..
(சாரதாவித்யாலயா பள்ளியை ஒட்டிய சாலை..)

நேரில் சந்திக்க நெஞ்சு நிறைய ஆவல்...
என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..

Tuesday, October 29, 2013

வணக்கம் ..
நண்பர் பாண்டியன் ஜி , 25-10-2013 அன்று பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற இலக்கியவீதி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு.
அதைத் தன்னுடைய 'வேர்கள்'  வலைப் பூவில் பதிவும் செய்திருக்கிறார்..
அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி.. 

பகிர்வை கீழ் காணும் இணைப்பில் காணலாம்..

Wednesday, October 23, 2013

இலக்கியவீதி விழா அழைப்பு..

.


இலக்கியவீதி விழா அழைப்பு.. 



வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலக்கியவீதி அழைப்போடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்..
விழாவில் சந்திக்க விழைகிறேன்..

என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..


Thursday, May 2, 2013

Wednesday, May 1, 2013

தேவன் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா.....

அன்புடையீர் வணக்கம்...

தேவன் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா. 

05 -05 - 2013 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு,

தத்வாலோகா அரங்கில்  நடை பெற உள்ளது.. 

தத்வாலோகா, 76, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, 
சென்னை - 600 018)


விருது  பெறுவோர்:


சென்னை கம்பன் கழகச் செயலர்
இலக்கியவீதி இனியவன்


சிங்கப்பூர் எழுத்தாளர் 
ஜே. எம்.சாலி 


தலைமை -  விருது வழங்கல்:

முன்னாள் உள் துறைச் செயலர் - ஐ .நா.சபை கொள்கை ஆலோசகர்,

திரு பி.எஸ்.ராகவன், ஐ.ஏ.எஸ் (ஓய்வு ) 


இந்த இனிய விழாவிற்கு உறவும், நட்புமாக வருகைத் தர வேண்டுகிறோம்.. 

அழைப்பின் மகிழ்வில்; சாருகேசி

Sunday, February 13, 2011

'இலக்கியவீதி'யின் அன்பழைப்பு...

வணக்கம்..
நலனே விளைய வேண்டுகிறேன்..
* கல்வித் தலமனைத்தும் இலக்கியவீதி..
* கவிஞாயிறு தாராபாரதி நினைவு நூலகத் திறப்பு..
* 'கலைஞன்' மாசிலாமணி புகழஞ்சலி..
- ஆகிய நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை இணைத்துள்ளேன்..
வழக்கம்போல் ஒத்துழைப்பு அளிப்பீர்கள் என நம்புகிறேன்..
தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி..
விழாவில் சந்திப்போம்..
மீண்டும் வணக்கம்..
                                                                                                       - என்றென்றும் அன்புடன்..
                                                                                                         இலக்கியவீதி இனியவன்..